Other News
தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் -தாயை தோளில் சுமந்து சென்ற மகன்கள்!
தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாயின் விருப்பம்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த எரிக்டி பால் என்ற 87 வயது மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.
இதையறிந்த அவரது மகன்கள் ரோஜனும், சுந்தரமும் திட்டம் தீட்டினர். எனவே, அம்மாவின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ மலரான நீலக்குறிஞ்சியை கண்டு மகிழ்ந்தார் மூதாட்டி. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அனைவருடனும் பகிரப்பட்டுள்ளது.