கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

ld785*  வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு  தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

*  கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து  காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது  நிற்கும்.

*  வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின்  தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

*  கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி  தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

*  நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

*  ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி  ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

*  காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி  தேய்த்துவர முடி கருமையாகும்.

*  அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து  கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

*  மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு  தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

இவையனைத்தையும் செஞ்சுப்பாருங்க! பூரிச்சுப் போவிங்க!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button