ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதி கொ-லை
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும், பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். காசா மீது ஏவுகணை வீசி இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. இதனால், இரு தரப்பினரும் பலத்த சேதம் அடைந்தனர்.
எட்டு நாள் தாக்குதல்களுக்குப் பிறகு நேற்று இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3,000ஐத் தாண்டியது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
ஹமாஸின் மூத்த தளபதி மெராட் அபு மெராட் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதியும் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை இன்று அறிவித்துள்ளது. நுக்பா தளபதி பிலால் அல்-கெதுரா கொல்லப்பட்டார்.