Other News

இலங்கையில் காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்

அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடித்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் முதுகையும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரின் விரலையும் கடித்ததில் இளம் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகளை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

நேற்றிரவு, பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதன் போது இரு இளைஞர்களில் ஒருவரின் காதலி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

விசாரணை நடத்தி வந்த இரண்டு பெண் போலீசாரை கடித்து காயப்படுத்தினார். பலத்த காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது கோட்டை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button