Other News

தேசிய விருதை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் -ஸ்ரீகாந்த் தேவா

டெல்லியில் நடைபெற்ற 69வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தேனிசைத் தென்றல் தேவாவின் மகனான இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது ‘கருவறை ‘ குறும்படத்திற்காக சிறந்த இசைக்கான தேசிய விருதை வென்றார். தேசிய விருதுடன் டெல்லியில் இருந்து இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஸ்ரீகாந்த் தேவாவை ஊடகவியலாளர்கள் வரவேற்றனர்.

மேலும் அவர் கூறினார்: “இந்த தேசிய விருது ஒரு குறும்படத்துக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்றதில் எங்கள் அப்பா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். குடியரசுத் தலைவரிடம் இப்படிப்பட்ட விருதைப் பெற்றதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஒரு தமிழனாக இந்த விருதைப் பெறுவது பெருமையாக இருக்கிறது. எல்லோரும் நேற்று என்னிடம் கேட்டார்கள். இந்த விருதை யாருக்கு அர்ப்பணிப்பேன், என் தந்தைக்கு அர்ப்பணிப்பேன்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

 

 

அப்பாவுக்கு கிடைக்காத விருது இல்லை. ஆனால் இந்த விருது அவருக்கு சிறப்பு. ஒவ்வொரு படத்துக்கும் விருது கிடைக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம், ஒவ்வொரு கலைஞரும் தேசிய விருது பெற வேண்டும் என்பது எங்கள் கனவு. என்னுடைய 20க்கும் மேற்பட்ட படங்கள் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. “இந்தப் படத்தை நான் தயாரிக்கும் போது எனக்கு விருது கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button