சமையல் குறிப்புகள்

சுவையான… வெண்டைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு – 1/2 கப்

* தக்காளி – 1 (நறுக்கியது)

Related Articles

* வெண்டைக்காய் – 12-15

* சாம்பார் பவுடர் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 2 சிட்டிகை

* புளிச்சாறு – 1/4 கப்

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 8 (நறுக்கியது)

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவிக் கொண்டு, துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். பின் வெண்டைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு நிறம் மாறி பிசுபிசுப்புத்தன்மை நீங்கும் வரை நன்கு வதக்க வேண்டும். பிசுபிசுப்புத்தன்மை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு வெண்டைக்காயை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அடுப்பில், குக்கரை வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

Vendakkai Sambar Recipe In Tamil
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும்.

* பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் வதக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின் அதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* வெண்டைக்காய் நன்கு வெந்ததும் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்கவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார்.

குறிப்பு:

* சாம்பாரானது மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் நீராகவோ இருக்கக்கூடாது. இடைப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.

* சாம்பார் பொடியை காய்கறிகளை வதக்கும் போது சேர்த்தால், ப்ளேவர் இன்னும் அற்புதமாக இருக்கும்.

* இந்த சாம்பாருடன் எந்த காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* ஒருவேளை உங்களுக்கு சாம்பாரின் காரம் குறைவாக இருப்பது போன்று இருந்தால், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button