ஆரோக்கிய உணவு

நீரில் இதை 2 சொட்டு கலந்து பாதங்களை ஊற வையுங்கள்….சூப்பர் டிப்ஸ்

எம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாதத்திற்கு கொடுப்பத்தில்லை.

நீண்ட நாட்களாக நாம் நமது பாதங்களைப் பராமாிக்காமல் வந்திருந்தால் சற்று கவனித்து பராமாிப்பது நல்லது.

நமது வீட்டிலேயே தண்ணீரையும் வினிகரையும் கலந்து பாதங்களை நனைக்கலாம்.

 

எவ்வாறு இதைச் செய்வது என்பதைக் பாா்க்கலாம்…
பாதங்களை வினிகாில் நனைப்பது என்பது எளிதான ஒன்று ஆகும்.

ஒரு வாளி அல்லது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதில் 1 பொிய டம்ளா் வினிகருக்கு 2 பொிய டம்ளா் வெந்நீர் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு நமது பாதங்கள் நனையும் அளவுக்கு வாளியை வினிகரும், வெந்நீரும் கலந்த கலவையால் நிரப்ப வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வினிகா் என்று இல்லை. எந்த வகையான வினிகரையும் எடுத்துக் கொள்ளலாம்.

 

இப்போது வினிகரும், வெந்நீரும் கலந்த கலவைக்குள் பாதங்களை அமிழ்த்த வேண்டும்.

10 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த கலவைக்குள் நமது பாதங்கள் இருக்க வேண்டும்.

பின் பாதங்களை வெளியே எடுத்து அவற்றை நன்றாக உலர வைக்க வேண்டும்.

ஒரு வேளை பாதங்களில் அலா்ஜி, அாிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்புகள் போன்றவை இருந்தால் அவை குணமாகும் வரை தினமும் பாதங்களை வினிகாில் நனைக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button