ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோயை அடியோடு அழிக்க பயன்படும் கிராம்பு -தெரிஞ்சிக்கங்க…

உணவில் சேர்க்கப்படும் கிராம்பில் பலவிதமான நன்மைகள் அடங்கியுள்ளது. இவை கிராம்பின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. செரிமானமின்மை, பசியின்மை, சளி, இருமல், குமட்டல் போன்ற உபாதைகளுக்கு உரிய தீர்வு வேண்டுமெனில் அதை கிராம்பின் மூலமும் பெறலாம்.

இத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் கிராம்பு ஆனது ஆயுர்வேதத்தில் முக்கியப் பொருளாக விளங்குகிறது. முக்கியமாக பல் வலி, பல் சொத்தை வாய் துர்நாற்றம் என வாய் சுகாதாரத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன்பின் தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி தட்டி போடுவது போல் கிராம்பையும் தட்டி போட்டு குடித்தால் நெஞ்சு எரிச்சல், செரிமானமின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இப்படி பல வகைகளில் வீட்டு வைத்தியமாக இருக்கும் கிராம்பு நீரிழிவு நோய்க்கும் நல்லது என கூறப்படுகிறது. கிராம்பு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின் செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

கிராம்பில் நீரிழிவு நோய்க்கான அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி , ஆண்டிசெப்டிக் பண்புகள், செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் ஆகியவையும் இருப்பதால் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

அதுமட்டுமில்லாமல் கிராம்பின் எண்ணெய் கூட இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது. சரி கிராம்பை தினசரி உட்கொள்ள டீ போட்டு குடிப்பது சிறந்த வழியாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button