முகப் பராமரிப்பு

முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா ?இதை முயன்று பாருங்கள்

முகத்தில் இருக்கும் கருமையால் மற்றவர்களிடம் பழகும் போது தைரியத்துடன் தன்னம்பிக்கையுடனும் இயல்பாக பேச இயலவில்லை என்ற கவலை உங்களுக்கு இருந்தால் விட்டுத்தள்ளுங்கள். உங்கள் முகத்தில் உள்ள கருமைக்குத் தக்காளி மிகச்சிறந்த தீர்வாக உதவும். முகத்தில் படும் சூரியனின் வெப்பத்தால் மற்றும் புறஊதாகதிர்கள் தாக்குவதால் கருமை நிற மாற்றம் ஏற்படலாம். மேலும் இவை தோல் புற்றுநோய் ஏற்படவும் வழி செய்யும்.

முகத்தில் உள்ள இந்த கருமை நிறத்தை நீக்க நீங்கள் லேசர் மருத்துவம், விலையுயர்ந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் இதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். இதற்காக நீங்கள் கூடுதல் பணத்தை செலவு செய்யத் தேவையில்லை. உங்கள் அடுப்பறையில் இருக்கும் பொருட்களை வைத்தே முக கருமையை நீக்கி விடலாம். இயற்கையான பாட்டி வைத்தியத்தை பின்பற்றி எவ்வாறு மிக சிறந்த பலனை பெறுவது என்று பார்க்கலாம்.
உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.

சருமத் துளைகள்

முகத்தில் அங்காங்கே சிறு சிறு துளைகள் இருக்கும். இந்த துளைகளை போக்க நினைத்தால் உங்களுக்கு கண்டிப்பான முறையில் தக்காளி உதவும். தக்காளி மற்றும் சிறிது தண்ணீர் கலந்து துளைகள் உள்ள இடங்களில் மசாஜ் செய்வதன் மூலம் துளைகள் மிக விரைவில் சுருங்கி விடும்.

உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.
முகப்பரு இல்லை

தக்காளியில் உள்ள குளிரூட்டும் பண்புகள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தோல் அழற்சியில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. இதனால் பருக்கள் அல்லது முகப்பரு வராமல் தடுக்கிறது. ஒரு தக்காளியை நன்றாக பிசைந்து கூழ் செய்து தினமும் முகத்தில் தவறாமல் பயன்படுத்தி வாருங்கள். முகத்தில் பருக்களே வராது.8fae5753836576db8

உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.
எண்ணெய் சருமம்

தக்காளி மற்றும் அதனுடன் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து நன்றாக கலந்து ஒரு காட்டன் உதவியுடன் முகத்தில் மசாஜ் செய்யுங்கள். இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி உங்கள் முகத்தை எண்ணெய் இல்லாததாக மாற்றுகிறது.

உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.
வயதான தோற்றம்

தக்காளி சருமத்தில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ளது. மேலும், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுவதன் மூலம் வயதான அறிகுறிகளான நேர்த்தியான கோடுகள், சுருக்கங்கள், கறைகள், கருவளையங்கள் மற்றும் சில வயதான அறிகுறிகளைத் தாமதப்படுத்தும் வேலைச் செய்து வயதான தோற்றத்தைத் தடுக்கிறது.

உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.
நிற மாற்றம்

தக்காளி வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளது. இது மந்தமான சருமத்திற்கு மெருகு ஊட்ட பயன்படுகிறது. உங்கள் சருமத்தை மெருகேற்ற நினைத்தால் தக்காளி சாறுடன் தேன்கலந்து முகத்தில் தடவி வாருங்கள். விரைவில் பலனை பெற நினைத்தால் தினமும் இந்த கலவையை முகத்தில் தடவுங்கள். இவை உங்கள் சருமத்தை ஒளிரச் செய்து இயற்கை பேஷியல் செய்தது போலத் தோற்றத்தைத் தரும்.

உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.
கரும்புள்ளிகள்

இந்த பரிசோதனை மருத்துவர்களால் சோதிக்கப்பட்ட ஒன்றாகும். முகத்தில் அல்லது மூக்கின் மேல் இருக்கும் கருமை நிற புள்ளிகளை நீக்க ஒரு முழு தக்காளியை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள். அதனை பிளாக்ஹெட்ஸுக்கு எதிராக வைத்து அழுத்த வேண்டும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் அதை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை தினமும்செய்து வருவதால் உங்கள் பிளாக்ஹெட்ஸுக்கு பை பை சொல்லிவிடலாம்.

உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.
குளிர்வித்தல்

உங்கள் தோலில் தீக்காயங்கள், மந்தமான தன்மை அல்லது தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் தக்காளி பழச்சாறு கொண்டு எளிமையாக சரி செய்து விடலாம். தக்காளியை தயிருடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்னர் கழுவுங்கள். இது உடனடியாக உங்கள் சருமத்தை குளிர்வித்து பளபளக்கச் செய்யும்.

உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.
இறந்த செல்கள்

உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்க தக்காளி உதவுகிறது. தக்காளியை எடுத்து இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதில் சிறிது சர்க்கரை சேர்த்து சருமத்தின் மீது மசாஜ் செய்யுங்கள். இப்போது உங்கள் புதிய சருமத்திற்கு ஹலோ சொல்லுங்கள்.தினமும் உங்கள் சருமத்தில் தக்காளியின் பாதி பகுதியை தேய்த்தால் போதுமானது. அழகான மற்றும் பளபளப்பான தோற்றமளிக்கும் சருமம் உங்களுடையதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button