ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்வோமா?

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிகம். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக மஞ்சள் நிற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவைக் கொண்ட, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவும் குறைவாக இருக்கும்.

மஞ்சள் நிற பூசணி நார் ஆக்ஸிஜனேற்றத்தின் புதையல், இதை உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

பூசணிக்காயில் பாலிசாக்கரைடுகள் எனப்படும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

காலை எழுந்தவுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் எனென்ன தெரியுமா?

இதைத்தவிர, நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை நன்மை பயக்கும். எலுமிச்சை தண்ணீர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

மஞ்சள் நிற கேரட் மிகவும் நன்மை பயக்கும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வைக்கு உதவுவதாகவும், வைட்டமின்கள் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது.

மேலும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button