சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு உளுந்து தோசை

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு-200 கிராம்
உளுத்தம் பருப்பு-50 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* உளுத்தம் பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

* பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

* அதில் கேழ்வரகு மாவை சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

* கலந்து வைத்த மாவை ஐந்து மணி நேரம் வைத்திருக்கவும். மாவு பொங்கி வந்திருக்கும்.

* தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி மெல்லிய தோசையாக வார்க்கவும்.

* இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னி, கார சட்னியுடன் பரிமாறவும்.

* சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
8e8d806f de0e 4a84 b219 0860dcfe4202 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button