முகப் பராமரிப்பு

முகம் பளபளக்க/ Kasthuri Manjal

தினமும் சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, கஸ்தூரி மஞ்சளை முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும்.

Sensitive சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சளை பூசாமல், இதனுடன் பால்/தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும்..

Oily Skin உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகித்தால் நல்லது.

கஸ்தூரிமஞ்சள் + பூலாங்கிழங்கு
இந்த இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

கஸ்தூரிமஞ்சள் + பயித்தமாவு + தயிர்
இதனை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த Pack.

கஸ்தூரிமஞ்சள் + கடலை மாவு + பச்சைப்பயறு மாவு + பாலாடை
முகத்தில் இயற்கை அழகு பேண, மேலே சொன்ன நான்கையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button