Other News

17 வயது சிறுவனை கரெக்ட் செய்து ஓட்டம் பிடித்த திருமணமான பெண்

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன். இவர் அப்பகுதியில் உள்ள வெள்ளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் 14 நாட்களாகியும் சிறுவன் திரும்பி வரவில்லை.

இதனால் கவலையடைந்த பெற்றோர் அங்கும் இங்கும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவனின் செல்போன் எண்ணும் கட் செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சிறுவன் வேலை செய்த அதே வெள்ளிக் கடையில் வேலை செய்த 21 வயது பெண்ணையும் அதே நாளில் காணவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அந்த பெண்ணின் கணவரும் காணாமல் போன மனைவியை தேடி வந்தார். போலீஸ் விசாரணையில், சிறுவன் வேலை செய்த வெள்ளிப் பட்டறையில் வேலை செய்த 21 வயது பெண்ணையும் அதே நாளில் காணவில்லை என்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் கணவரும் தனது மனைவியை காணவில்லை என தெரிவித்துள்ளார்.

இறுதியில் இருவரும் தப்பியோடியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இளம்பெண் 17 வயது சிறுவனை ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button