இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விவசாயி மகள்!இதுவரை வெல்லாத பிரிவில் பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்தியா மூன்றாவது தங்கப் பதக்கம் வென்றது.
துப்பாக்கிச் சுடுதல் மற்றும் கிரிக்கெட் ஆகிய இரு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றதைத் தவிர, குதிரையேற்றப் போட்டியில் அனுஷ் அகர்வால், திவ்யகிருதி சிங் மற்றும் விபுல் சேடா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தியாவுக்கு இது மூன்றாவது தங்கப் பதக்கம்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]இதேபோல், பாய் மர படகு பந்தயத்தின் டிங்கி ஐஎல்சிஏ-4 பிரிவில் நேகா தாக்கூர் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இந்தப் பிரிவில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.
இந்தியப் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது விவசாயியின் மகள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக பாராட்டினர். இந்தப் பிரிவில் தாய்லாந்து தங்கப் பதக்கம் வென்றது.
ஆண்களுக்கான விண்ட்சர்ஃபர் பாய்மரப் படகு ஆர்எஸ் பிரிவில் இந்தியாவின் இபாத் அலி வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவர் 4×100 தொடர் ஓட்டத்தில் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
Congratulations
All the best jai india