ஆரோக்கிய உணவு

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்… !

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

* காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். மேலும், செரிமான பிரச்னைகள் நீங்குவதுடன் முடி நன்கு கருமையாக வளரும்.
* ரத்தசோகை உள்ளவர்கள், காலையில், ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்தசோகை நீங்கும்.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில், கறிவேப்பிலையை பச்சையாக உண்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
* கறிவேப்பிலை, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது.
* ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை, தேன் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து, வெளியேறி விடும்.
* கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்கள் வெளியேறி விடுவதுடன், அதில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.E 1456468154

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button