மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர் -நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்
ஹங்கா நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட எம்.பி.க்கள் இருக்கையில் இருந்து எழுந்து அவருக்கு கரகோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், கனேடிய நாடாளுமன்றத்தால் கௌரவிக்கப் பட்ட திரு.ஹுங்கா, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படைகளின் முக்கிய உறுப்பினராகவும், லட்சக்கணக்கான யூதர்களின் மரணத்திற்கு காரணமானவர்களில் ஒருவராகவும் இருந்தார் என்பது தெளிவாகியது.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் கண்டனத்துக்கு உள்ளானது. இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று கனடா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அந்தோணி ரோட்டா பதவி விலகினார்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]இதனிடையே, இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் நாஜி வீரர்களைப் பாராட்டியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
“யூதர்களைக் கொன்ற ஹிட்லரின் நாஜி இராணுவத்தில் இருந்த ஒருவரைக் கௌரவித்தது தவறு” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “காங்கிரஸையும் கனடாவையும் சங்கடப்படுத்திய தவறு இது. அந்த நபர் ஏன் சர்வதேச மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார்? சபாநாயகர் அந்தோணி ரோட்டா தவறுக்கு மன்னிப்பு கேட்டார். ”