தாய்ப்பால் கொடுத்த போது பெண்பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
சமீப காலமாக திடீர் மரணங்கள், அகால மரணங்கள், மாரடைப்பு போன்றவை அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சியின் போது, நடனமாடும் போது, திருமண மேடைகளில், நடக்கும்போது, பல்கலைக்கழக மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் போது மரணங்கள் ஏற்படுவதால் அதிர்ச்சியும் கவலையும் அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி சின்னியம்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் மனைவி பூரணி, குழந்தைக்கு பால் கொடுக்கும் போது இளம் தாய் சுருண்டு விழுந்து இறந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. வீட்டில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பூரணி திடீரென மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த பூரணியின் கணவர் மதன்குமார், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சுயநினைவை இழந்த பூரணியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பூரணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
😭😭😭