Other News

பிரபல காமெடி நடிகர் திடீர் கைது..! நீதிபதியுடன் மோதல்!

தமிழ் நகைச்சுவை நடிகர் ஜெயமணி நீதிபதியுடன் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் ஜெயமணி. அவர் நடிகர் செந்திலைப் போல இருக்கிறார்.

 

கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜெயமணி பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 18ம் தேதி வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே உள்ள கார்ப்பரேஷன் பூங்காவில் தோழி ஒருவருடன் ஜெயமணி வாக்கிங் சென்றார்.23 65335bc22293f

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] அப்போது அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நீதிபதி திருமால் என்பவரை ஜெயமணி தனது நண்பரோடு சேர்ந்து வம்பிழுத்து திட்டியதோடு மட்டுமல்லாமல், நீதிபதியை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக நீதிபதி திருமால் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கிண்டி போலீசார் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button