சிற்றுண்டி வகைகள்

உப்புமா பெசரட்டு

என்னென்ன தேவை?

பச்சைப்பயறு – 1 கப்,
இட்லி அரிசி – 1 கப்,
பச்சைமிளகாய் – 8,
இஞ்சி – ஒரு துண்டு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், (வெங்காயம் – 1 + பச்சைமிளகாய் + கொத்தமல்லித்தழை – தூவ).

உப்புமா செய்ய…

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
ரவை – 1/2 கப்,
தண்ணீர் – 1 கப்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறு, இட்லி அரிசியை 4 மணிநேரம் ஊறவைத்து, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். இத்துடன் சீரகம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், ரவை சேர்த்து நன்கு வறுக்கவும். இத்துடன் உப்பு, தண்ணீர் சேர்த்து உப்புமா செய்து இறக்கவும். சூடான கல்லில் அரைத்த மாவை ஊற்றி பெசரட்டு வார்த்து, எண்ணெய் விட்டு அதற்கு மேல் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் உப்புமா வைத்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.sl4744

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button