Other News

35 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடல் -முன்னாள் காதலர்கள் ஓட்டம்

கூடவே படித்த நாட்களில் துளிர்விட்ட காதல் காய்க்காமல், 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் காதலர்கள் குடும்பத்தை மறந்து வீட்டை விட்டு ஓடினர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரளாவில் நடந்துள்ளது.

எர்ணாகுளம் மற்றும் இடுக்கியைச் சேர்ந்த இருவரும் மூன்று வாரங்கள் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில், இரு குடும்பத்தினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் “காணவில்லை” என்று புகார் அளித்தனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதையடுத்து, போலீஸ் சைபர் பிரிவு உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. அதன் மூலம் காதலர்கள் இருவரும் திருவனந்தபுரம், பாலக்காடு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்காணித்த போலீஸார், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மூவாடுபுழா காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

எனவே, இருவரும் கடந்த சனிக்கிழமை காவல் நிலையம் வந்தனர். பின்னர் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தெரியவந்தது.

இவர்கள் 1987ம் ஆண்டு மூவாட்டுபுழா பள்ளியில் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது.

Related Articles

2 Comments

  1. 25 இல் காதலித்து இருந்தாலும் இப்போ 60
    இனி ஓடி என்ன செய்வது பிள்ளைகள் குடும்பங்களை பிரிவது என்ற ஒன்றுதான் சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button