1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசியின் சடலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வேறு கோள்கள் உள்ளதா, மற்ற கிரகங்களில் மனிதர்களைத் தவிர வேறு உயிரினங்கள் உள்ளனவா என்று பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மையா பொய்யா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதே சமயம் வேற்றுகிரகவாசிகளைப் பற்றி நாம் வாய்மொழியாகத்தான் அறிவோம்.
இந்நிலையில் மெக்சிகோ நகரில் ஏலியன் கண்காட்சி நடைபெற்றது. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மெக்சிகோ அரசு ஏலியன் கண்காட்சியை நடத்தியது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
கண்காட்சியில் இரண்டு வேற்றுகிரகவாசிகளின் எச்சங்கள் இடம்பெற்றிருந்தன. மனிதனாகக் கருத முடியாத அளவுக்குச் சிறிய இரண்டு உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காட்டப்பட்டன. இந்த எச்சங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
சமீபத்தில் மெக்சிகோவில் நடந்த ஏலியன் கண்காட்சி ஏலியன்கள் மீதான மக்களின் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.