Other News

மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் சுட்டுக்கொன்ற பெண்ணின் குடும்பத்தினர்

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்டோரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு சிங். அவருக்கு தீரஜ் சிங் என்ற மகனும், சாந்தினி குமாரி (வயது 23) என்ற மகளும் உள்ளனர்.

அதே பகுதியில் வசிக்கும் சாந்தினி குமாரியும், சந்தன்குமாரும் (40) காதலித்து வந்தனர். பப்பு சிங்கின் காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பை மீறி சந்தன்குமாருக்கும், சாந்தினிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

 

அதன் பிறகு இருவரும் ஊரை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் புறநகர் பகுதியில் வசித்து வந்தனர். தம்பதிக்கு ரோஷ்னி குமாரி (2 வயது) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் தங்கள் குழந்தையுடன் நவ்டோரியா கிராமத்திற்கு வந்தனர்.

1599955 dsghg

திருமணமான மகள், மருமகன் மற்றும் பேத்தி ஊருக்கு வருவதைப் பார்த்த சாந்தினியின் தந்தை பப்பு சிங், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு, கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், நடுரோட்டில் வைத்திருந்த இரும்பு கம்பியால், மகள், மருமகன், பேத்தி ஆகிய 3 பேரையும் பபுசின் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூவர் சுயநினைவை இழந்தனர்.

 

அங்கு வந்த தீரஜ் சிங் தனது சகோதரி சாந்தினி குமாரி, அவரது கணவர் சந்தன்குமார், மகள் ரோஷ்னி குமாரி ஆகியோரை சரமாரியாக சுட்டார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், பப்பு சிங் மற்றும் அவரது மகன் தீரஜ் சிங் ஆகியோரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button