சைவம்

ஈரப்பலா ஸ்பெசல் கறி, சிப்ஸ்

ஈரப்பலாக்காய்க் கறி

தேவையான பொருட்கள்

நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
தேங்காய்ப் பால் – ¼ கப்
பூண்டு- 4 பல்லு
இஞ்சி – 1 துண்டு
மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன்
மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு – தேவைக்கேற்ப
கடுகு- சிறிதளவு
கறிவேற்பிலை- சிறிதளவு
ஒயில் – 1 ரீ ஸ்பூன்
eerapilacurry
செய்முறை

பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள்.

உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள்.

தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

வெங்காயம் மிளகாய் வெட்டி எடுங்கள்.

ஒயிலில் கடுகு தாளித்து வெங்காயம் மிளகாய் வதக்குங்கள்.

வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேற்பிலை சேர்த்துவிடுங்கள்.
தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

நன்கு கொதித்து வர கிளறி இறுகிவர, மிளகுப் பொடி தூவி இறக்குங்கள்.

மிளகு வாசத்துடன் தாளித்த மணமும் பரவி நிறையும்.

பலாக்காய் சிப்ஸ்

eerapilaporiyal
பலாக்காயை மிகவும் மெல்லிய 2′ நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

அடுப்பை மிதமாக வைத்து ஒயிலில் அவற்றைப் போட்டு கவனமாக அடிக்கடி கிளறுங்கள்.

பொரிந்து நன்கு கலகலப்பாக வந்ததும் எடுத்து எண்ணையை வடியவிடுங்கள்.

மிளகாய் பொடி, உப்பு பொடி சேர்த்துப் பிரட்டுங்கள்.

ஆறியதும் கண்ணாடிப் போத்தலில் காற்று நுளையாதபடி அடைத்து வையுங்கள்.

நல்ல மொறுமொறுப்பாய் இருக்கும்.

இரண்டுகால் எலிகள் தின்னாது விட்டால் 2-3 நாட்களுக்கு கெடாது இருக்கும்.

(பொரித்த பின் மிளகாய் பொடி, உப்பு பொடி என்பவற்றை குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்ப வகை வகையான காரத்தில் சேர்க்கலாம்)

eerapilacurryporiyal 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button