முகப் பராமரிப்பு

இந்த ஹெர்பல் ஆவி பிடிப்பதால் என்ன பயன் தெரியுமா?

சருமத்துளைகளின் வழியாக எண்ணற்ற தூசுக்கள் மற்றும் அழுக்குகள், க்ரீம்கள் படிந்திருப்பது நம் கண்ணிற்கு தெரியாது. அவைகள்தான் நமது சுருக்கத்திற்கு காரணம்.

இறந்த செல்கள் வெளியேற முடியாமல் அங்கேயே தங்கி விரைவில் முதுமை தோற்றத்தை தந்துவிடும்.

அதனால் வறண்ட சருமம் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை, எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஆவி ஆவி பிடித்தால் உங்கள் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, சுத்தமாகவும் இள்மையகவும் இருக்கும். அவ்வாறான ஹெர்பல் ஆவி முறையைப் பற்றி இங்கு காண்போம்.

தேவையானவை : நீர் ரோஜா எண்ணெய் லாவெண்டர் எண்ணெய் தேயிலை மர எண்ணெய் சாமந்தி பூ எண்ணெய் எலுமிச்சை தோல் – துறுவியது.

செய்முறை : முதலில் சுத்தமான நீரை கொதிக்க வையுங்கள். நன்றாக கொதிக்கும் நிலை வந்தவுடன் அடுப்பை குறைத்து ரோஜா எண்ணெயை 3 துளி விடவும்.

அதன் பின் எலுமிச்சை துறுவலை சேர்க்கவும். எலுமிச்சை வாசனை வரும் வரை காத்திருங்கள்.

பின்னர் லாவெண்டர் மற்றும் சாமந்தி பூ என்ணெயை 3 துளிகள் மற்றும் தேயிலை மர எண்ணெயை விடவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு இந்த நீரை இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி ஆவி பிடிக்க வேண்டும்.

அந்த நீரின் சூடு குறையும் வரை ஆவிபிடித்த பின் பருத்தி துண்டினால் முகத்தை ஒத்தி எடுங்கள். பின்னர் மாய்ஸ்ரைஸர் க்ரீன் அல்லது தேங்காய் என்ணெய் தடவ வேண்டும்.

skin 15 1481800614

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button