கேப்டன் எப்படி இருக்கிறார்.? வெளியான புகைப்படங்கள் இதோ.!
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “அவருக்கு கூடுதலாக 14 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது, கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலை சீராக இல்லை மற்றும் அவரது நுரையீரலுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது” என்று அறிக்கை கூறியுள்ளது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை அவரது மகன் சண்முக பாண்டியன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “கேப்டன் நலமுடன் இருக்கிறார். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார். யாரும் வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம். நன்றி.” என தொண்டர்களும் ரசிகர்களும் கேப்டனின் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு விட்டனர்.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.– திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/u6tvBGtCdD
— Vijayakant (@iVijayakant) December 2, 2023