சிற்றுண்டி வகைகள்

பழநி பஞ்சாமிர்தம்

என்னென்ன தேவை?

வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் – 6,
நறுக்கிய பேரீச்சை – 12-15,
காய்ந்த திராட்சை – தேவைக்கு,
தேன் – 1/2 கப்,
நெய் – 1/2 கப்,
நாட்டுச்சர்க்கரை – 100 கிராம்,
பனங்கற்கண்டு – சிறிது.

எப்படிச் செய்வது?

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நெய், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு போட்டு பிசைந்து பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும். குறிப்பு : பழநி முருகனுக்கு பஞ்சாமிர்தம் பிரதான நிவேதனம். வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button