ஆரோக்கிய உணவு

புதினா சர்பத்

1493dfb5 cf08 4b95 bd9e 1d2a38224af2 S secvpf

புதினா கீரையில் சர்பத் தயாரிக்க நல்ல இலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். வாடி வதங்கிய இலைகள், அழுகிய இலைகளை தவிர்த்து விட வேண்டும். இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொண்டு, தண்ணீரில் அலசி பயன்படுத்தலாம்.புதினா சர்பத் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-

புதினா கீரை- ஒரு கோப்பை அளவு,
எலுமிச்சம் பழம்-1,
பனங்கற்கண்டு-தேவையான அளவு.

செய்முறை:-

• புதினா கீரையை இடித்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

• எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து கொள்ளுங்கள்.

• பனங்கற்கண்டை தனியாக தூளாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

• கீரை சாறு, எலுமிச்சம் பழச்சாற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

• அதோடு பனங்கற்கண்டை போட்டு கலக்க வேண்டும்.

• இந்த கலவையை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும்.

• நன்றாக ஆறிய பின்பு, இதை சர்பத்தாக பயன்படுத்தலாம்.

• இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய பானம் ஆகும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button