பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு
பிக்பாஸ் சீசன் 7 இன்றிரவு பிரபல ரிவியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் வழங்கிய பரிசுகள் குறித்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
9 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 18 பேர் பங்கேற்றனர்.
ஆண் போட்டியாளர்களில் விஜய் வர்மா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், யுகேந்திரன், நிக்சன், பிரதீப் ஆண்டனி, மணி சந்திரா, விஷ்ணு விஜய் மற்றும் பாவா செல்லத்துரை ஆகியோர் அடங்குவர்.
பெண் போட்டியாளர்களில் ஐஷ், பிஜித்ரா, ரவீனா, பூர்ணிமா ரவி, ஜோவிகா, வினுஷா தேவி, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன் மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் அடங்குவர்.
மீதமுள்ள இரண்டு வைல்டு கார்டு பதிவுகள், கூல் சுரேஷ் முதலில் வருகிறார். யூடியூபர் பூர்ணிமா ரவிக்கு கமல் ஒரு விசில் பரிசளித்தார்.
மேலும் இருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக இரண்டு பேரும், மேலும் வீட்டிற்குள் கூல் சுரேஷ் முதல் ஆளாக சென்றுள்ளாராம். யூடியூபரான பூர்ணிமா ரவிக்கு கமல் விசில் ஒன்றினை பரிசாக கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
குக் வித் கோமாளி புகழ் ரவீனாவுக்கு பட்டர்பிளை ரிங் ஒன்றையும், பிரதீப் ஆண்டனிக்கு ஜாய் ஸ்டிக்கையும், சுயாதீன இசை கலைஞர் நிக்சனுக்கு கண்ணாடியையும், நடிகை வினுஷா தேவிக்கு கருப்பு வைரத்தையும் பரிசாக வழங்கியுள்ளாராம்.
நடனக் கலைஞர் குருநாதாவிற்கு வாசகம் அடங்கிய டீ சர்ட், அக்ஷயாவிற்கு கற்றாழை செடி, ஜோவிகாவிற்கு அவருடைய தாய் வனிதாவின் புகைப்படத்தையும், அமீரின் தோழியும் டான்சருமான ஐஷுவுக்கு A என்கிற எழுத்துடன் கூடிய ஜாக்கெட்டை கமல்ஹாசன் பரிசாக வழங்கினார்.
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? | Kamal Haasan Gifts Biggboss 7 Contestants
விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனுக்கு ஜோக்கர்கள் மூக்கில் அணியும் சிகப்பு நிற பந்தை பரிசாக வழங்கினார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு கட்டப்பையை பரிசாக வழங்கியுள்ளார்.
பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுக்கு அவரது தந்தை பயன்படுத்தி கண்ணாடியையும், நடிகர் விஷ்னுவிற்கு போட்டோ பிரேம் ஒன்றையும், எழுத்தாளர் பாவா செல்லத்துரைக்கு நோட்டு புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.