ஆரோக்கிய உணவு

பருப்பு கீரை சாம்பார்

 

பருப்பு கீரை சாம்பார்

பருப்பு கீரை சாம்பார் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-

பருப்பு கீரை-1 கட்டு,
துவரம் பருப்பு-200 கிராம்,
புளி, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு,
வத்தல், மிளகாய்- தலா 4 எண்ணிக்கை,
தக்காளி-5,
சீரகம்-1½ தேக்கரண்டி,
வெந்தயம், கடுகு, உளுந்தம் பருப்பு-தலா 1 தேக்கரண்டி,
தேங்காய் துருவல்- தேவையான அளவு,
கறிவேப்பிலை, சாம்பார் பொடி- சிறிதளவு.

செய்முறை:-

• கீரை, பருப்பை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

• பருப்பை தேவையான தண்ணீரில் வேகவிட வேண்டும்.

• அம்மியில் வத்தல், உப்பு, புளி, சீரகம், தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

•  வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பருப்பு வெந்ததும் கீரையை அதில் கொட்டி, வேக விட வேண்டும்.

• சற்று நேரம் கழித்து, அரைத்து வைத்திருந்த விழுதை அதில் சேர்த்து கிளறுங்கள்.

• நன்றாக கொதித்து கொண்டிருக்கும் போது, வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை போட வேண்டும்.

• தேவைக்கு ஏற்ப சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

• நன்றாக கொதித்ததும் வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கினால், பருப்பு கீரை சாம்பார் தயார் ஆகிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button