தலைமுடி சிகிச்சை

அலட்சியம் வேண்டாம்? நீங்க இப்படியா தலைக்கு எண்ணெய் தேய்குறீங்க? அடர்த்தியான முடி கூட கொட்ட தான் செய்யும்…!

இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இருக்கிறது. அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு.

அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. இதை முழுவதுமாக படித்தால் நீங்கள் இனி முடி உதிர்வு பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை.

நீங்கள் செய்யும் தவறுகள்

 

  • கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது மிகவும் நல்லது. அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும்.
  • அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.
  • பெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்த உடனேயே மசாஜ் செய்ய ஆரம்பித்து விடுவர்.
  • அப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். முதலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு கூந்தலை சிக்கலின்றி சீவிக் கொள்ளவும்.
  • பின்னர், எண்ணெய் தொட்டு மெதுவாக கைகளால் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் முடி கொட்டுவது குறையும் அல்லது முடி கொட்டாது. தலையை சீவி பிறகு எண்ணெய் தேய்ப்பதால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, வேர்கள் வலுபெற்று, கூந்தலையும் ஆரோக்கியமாக வளரச் செய்யும்.
  • பெரும்பாலானோர், எண்ணெயை கையில் ஊற்றி உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே தலையில் தேய்ப்பதை வழங்கமாக கொண்டிருப்பர்.
  • இப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். எப்போதும், எண்ணெயை ஒரு பவுளில் ஊற்றி அதை விரல்களால் தொட்டு, மெதுவாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச்சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கப்பெறும்.
  • மேலும் எண்ணெயால் கிடைக்கக்கூடிய ஈரப்பதமும் முழுமையாக கிடைத்திடும். அதுமட்டுமல்லாது, இப்படி எண்ணெய் தேய்த்தால் பொடுகு தொல்லை எனும் பேச்சுக்கே இடமிருக்காது.
  • எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக்கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர். இது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கால்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும்.
  • அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிர தான் செய்யும். தேய்க்கும் எண்ணெய் வேர்களால் உறிஞ்சப்பட்டு, கூந்தலை மிருதுவாக்க வேண்டுமென்றால், எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டாமல் ஃப்ரீயாக விட்டு விடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button