Other News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் அகற்றப்பட்ட போதிலும் பெறப்பட்ட தொகை பகிரங்கப்படுத்தப்படவில்லை.process aws 1

இவ்வாறானதொரு நிலையில், சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு பரிமாற்ற நிகழ்வு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button