​பொதுவானவை

‘அரியும்’ முன் அறிந்து கொள்வோம்!!

[ad_1]
‘அரியும்’ முன் அறிந்து கொள்வோம்!
 காய்கறிகள்
பசுமையாக பச்சைப் பசேலென்று இருந்தால் மட்டும், அப்படியே வாங்கி விட
முடியுமா? ஒவ்வொரு காயையும் ஒவ்வொரு விதமாகப் பார்த்து வாங்க வேண்டும். சில
காய்களைத் தேர்ந்தெடுக்கும் விதம் பற்றிப் பார்ப்போமா?

p126

வெண்டைக்காய் – நுனியை ஒடித்தால் ஒடியவேண்டும்.

அவரை, பீன்ஸ் – நார் எளிதில் உரிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்

கொத்தவரங்காய் – உடைத்தால் உடைய வேண்டும். வளையக் கூடாது.

வாழைத்தண்டு – பளிச் வெள்ளையில் இருக்க வேண்டும்.

முருங்கைக்காய் – முறுக்கினால் வளைய வேண்டும்.

வெங்காயம் – கருநீல நிறம், அழுகலுக்கான அடையாளம். இளம் நீல நிறம் நல்லது.

சேனை – சிவப்பாக இருந்தால் அரிக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டாம்.

தேங்காய் – குலுக்கிப் பார்த்தால் தண்ணீர் உணரப்பட வேண்டும். கண் அருகே அமுங்கக் கூடாது.

உருளைக்கிழங்கு – அழுத்தினால் அமுங்கக் கூடாது.

கீரைத்தண்டு – ஒடித்தால் ஒடிய வேண்டும்.

முள்ளங்கி – வேர்கள் தோன்றாததாக இருக்கவேண்டும்

பச்சை மிளகாய் – கெட்டியாக இருக்கவேண்டும்

பூண்டு – அழுத்தமானதாக பூண்டு இருக்கவேண்டும்.

காலிஃபளவர் – பூத்திருக்கக் கூடாது

கருணைக்கிழங்கு – இரு நாட்களாவது காய்ந்த பிறகு சமைக்கவும்.

p127

கோவைக்காய் – அமுங்கக் கூடாது

முட்டைக்கோஸ் – கெட்டியாக இருக்க வேண்டும்.

புடலங்காய் – உடைத்துப் பார்த்தால் சட்டென்று உடைய வேண்டும் நார் இருக்கக்கூடாது

பீட்ரூட், கேரட் – நல்ல நிறத்தில் இருக்க வேண்டும்

பாகற்காய் – நல்ல கரும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அமுங்கக் கூடாது.

வாழைப்பூ – கெட்டியான பூவின், உள்ளே உள்ளவை பிஞ்சாக இருக்க வேண்டும். மலர்ந்து இருந்தால் முற்றல் என்று புரிந்து கொண்டு தவிர்க்கலாம்.

வாழைக்காய் – பட்டையாக மூன்றுபுறமும் கெட்டியாக இருக்க வேண்டும்

சுரைக்காய் – கைக்கு கனமாக இருக்க வேண்டும். நீர் வற்றியது லேசாக இருக்கும்.

கத்திரிக்காய் – காம்பு பசுமையாக இருக்க வேண்டும்

காய்கறிக் கடைக்குப் போனால் மேலே சொன்ன மாதிரி காயைத் தேர்ந்தெடுத்து வாங்குங்க. கடைக்காரர் முறைத்தால் கண்டுக்காதீங்க?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button