மருத்துவ குறிப்பு

‘தைராய்டு புயல்’ பற்றிய சில முக்கிய தகவல்கள்! தைராய்டு புயல் ஒரு அபாயகரமான நிலை

தைராய்டு புயல் ஒரு அபாயகரமான நிலை,

ஆனால் மிகக் குறைவான நபர்களிலேயே காணப்படுகிறது. இந்த புயல் இதய செயலிழப்பு , மாரடைப்பு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும். ஹைப்பர் தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படாத போது தைராய்டு புயல் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில், ஒரு நபருக்கு அதிக காய்ச்சல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அதிகரித்த இரத்த அழுத்தம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இருக்கலாம். எனவே இதைப் பற்றி இன்று விரிவாகக் காணலாம்.

தைராய்டு புயலின் அறிகுறிகள்

ஹைப்பர் தைராய்டிசத்தைப் போலவே தைராய்டு புயலின் அறிகுறிகள் இருக்கின்றன. ஆனால் அவை மிகவும் கடுமையானவை மற்றும் திடீரென்று தோன்றும். இதனால் தான் தைராய்டு புயல் உள்ளவர்கள் தங்களை கவனித்துக் கொள்ள முடியவில்லை. இதன் முக்கிய அறிகுறிகள்:
ngjhg
* மிக அதிக இதய துடிப்பு (டாக்ரிக்கார்டியா) நிமிடத்திற்கு 140 துடிப்புகளுக்கு மேல்

* மிக அதிக காய்ச்சல், சில நேரங்களில் 105.8º க்கு மேல்

* தொடர்ந்து வியர்வை

* மஞ்சள் காமாலை

* நீர்ச்சத்து குறைபாடு

* நடுக்கம் மற்றும் பலவீனம்

* அசௌகரியம், வாந்தி மற்றும் குமட்டல்

* வயிற்றுப்போக்கு

* மயக்கம்

தைராய்டு புயல் தொடர்பான அபாயங்கள்

தைராய்டு புயல் ஒரு நபருக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது உடல் பாகங்கள் செயல்படுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்புக்கு கூடுதலாக, ஒரு நபருக்கு சுவாசம், புற வீக்கம், வயிற்று வலி மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்றவையும் இருக்கலாம். சில நேரங்களில் தைராய்டு புயலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மேல் சுவாசக் குழாயில் வைரஸ் தொற்று, நிமோனியா போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

காரணங்கள்

தைராய்டு புயலுக்கு முக்கிய காரணம் ஹைப்பர் தைராய்டிசத்தின் முழுமையற்ற சிகிச்சையாகும். ஹைப்பர் தைராய்டிசம் சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும் போது அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகள் நிறுத்தப்படும் போது, ஒரு நபர் தைராய்டு புயலுக்கு அதிக ஆபத்தில் உள்ளார். இந்த நிலைக்கான காரணங்கள் முக்கியமாக ஹைப்பர் தைராய்டிசத்துடன் தொடர்புடைய சிகிச்சையளிக்கப்படாத தைராய்டு சுரப்பி நோய்த்தொற்று ஆகும்.

குறிப்பு: ஹைப்பர் தைராய்டிசம் உள்ள அனைவருக்கும் தைராய்டு புயல் ஏற்படுவது இல்லை.

நோய் கண்டறிதல்

தைராய்டு புயலைக் கண்டறிய தனித்துவமான ஆய்வக சோதனை எதுவும் இல்லை. இதைக் கண்டறிய, நோயாளியின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களில் மருத்துவர்கள் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். இதுதவிர, மருத்துவர்கள் இரத்த பரிசோதனைகள் மூலம் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவை அளவிடுகின்றனர். தைராய்டு புயல் உள்ளவர்களில் டி 3 மற்றும் டி 4 ஹார்மோன்கள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

சிகிச்சை

தைராய்டு புயல் திடீரென உருவாகி உங்கள் உடலில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பாதிக்கிறது. ஆகவே அந்த நபருக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. அதற்கு தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்க புரோபில்தியோரசில் அல்லது மெதிமசோல் போன்ற ஆன்டிதைராய்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. தவிர, ஹைப்பர் தைராய்டிசம் சிகிச்சைக்கு நோயாளியின் தொடர்ச்சியான கவனிப்பு தேவைப்படுகிறது. ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு கதிரியக்க அயோடின் மூலம் சிகிச்சையளிக்க முடியும், இது தைராய்டை அழிக்கிறது. இருப்பினும், இந்த கதிரியக்க அயோடின் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹைப்பர் தைராய்டிசத்துடன் சிகிச்சையளிக்க பயன்படுத்த முடியாது. ஏனெனில் இது அவர்களின் கருவில் உள்ள குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அந்த சந்தர்ப்பங்களில், பெண்ணின் தைராய்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button