மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! வறட்டு இருமலில் இருந்து விடுபட இதோ சில ஆயுர்வேத வழிகள்!

தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைதான் இந்த வறட்டு இருமல்.

இந்த வறட்டு இருமல் வந்துவிட்டால் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும் தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும்.

இதனை சரி செய்ய சில ஆயுர்வேத முறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

  • ஒரு டீஸ்பூன் தேனில், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள சேர்த்து கலந்து சாப்பிட்டால், தொண்டைப்புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • பட்டை, இஞ்சி, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்தும் குடிக்கலாம். இது கடுமையான இருமல் மற்றும் சளியில் இருந்து விரைவில் விடுவிக்கும்.

  • சுடுநீரில் தேன் கலந்து ஒரு நாளைக்கு பலமுறை குடித்து வந்தால், எரிச்சலூட்டும் இருமலில் இருந்து விடுபடலாம்.
  • புதினாவை பல வழிகளில் உணவில் சேர்க்கலாம். அதில் இரவு உறங்குவதற்கு முதன் புதினா டீயை குடித்தால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் செய்யும் வறட்டு இருமல் தடுக்கப்படும்.
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால், வறட்டு இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். அதிலும் அத்துடன் சிறிது பூண்டு சேர்த்துக் கொண்டால், அது இன்னும் சிறப்பான பலனை விரைவில் தரும்.
  • இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்லவோ அல்லது இஞ்சி டீயைத் தயாரித்துக் குடிக்கவோ செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button