Other News
நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது!
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். இல்லை என்று சொல்லாமல் அனைவருக்கும் உணவளித்து, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ததை நினைத்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று திரு.விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது மரணத்திற்கு பின் அறிவிக்கப்பட்டது.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை வைஜயந்தி மல்லா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெக்ஸ்ட் __? பொட்டி___! ஓவர்.