முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெறும் ஐந்து நாட்களில் கருவளையம் போகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும்.

ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். ஒருவருக்கு கருவளையங்கள் இருந்தால், அது அவரை சோம்பேறியாக மற்றவருக்கு வெளிக்காட்டும்.

ஆகவே கருவலைத்தினை இயற்கை முறையில் போக்கியாக வேண்டும். இந்த பதிவில் கருவளையங்களை 5 நாட்களில் எப்படி நீக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. உடனே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கற்றாழையை பயன்படுத்தலாம்
1 ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் ப்ளாக் டீ சேர்த்து கொள்ளலாம்.

20 நிமிடம் நன்கு ஊறியதும், நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், 5 நாட்களில் கருவளையங்கள் காணாமல் போகும்.

பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம்
தினமும் இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி தினந்தோறும் செய்யும் போது, நாளுக்கு நாள் கருவளையங்கள் மெதுவாக மறைய ஆரம்பிப்பதை நீங்களே காண்பீர்கள்.

எலுமிச்சை பயன்படுத்தலாம்
எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் வைட்டமின் சி உள்ளது.

இத்தகைய எலுமிச்சையின் சாற்றுடன் சிறிது நீர் சேர்த்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை என ஓரிரு நாட்கள் செய்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறைவதைக் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button