வோட்கா கலந்து கொடுத்து மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்…!
கோவை மாவட்டம், ஒத்தகாரமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆதிநாராயணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். மகன் படுக்கைக்குச் சென்றதும், ஆதிநாராயணன் குளிர்ந்த பானத்துடன் வோட்காவை மனைவியின் வாயில் ஊற்றினார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார்.
பின்னர் ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் மயக்க நிலையில் இருந்த மனைவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Just another horrible aftermath of Blindly Irrational Approach towards, Cultured Marital Life and Culturally Sexual Pleasure, Sexual Awareness and Cultural Necessity, need to be Even more Clear and available, than it already and meagerly is for the Younger Generation can only resolve such misdemeanors.
கண்மூடித்தனமான பகுத்தறிவற்ற அணுகுமுறையின் மற்றொரு பயங்கரமான பின்விளைவு, பண்பட்ட திருமண வாழ்க்கை மற்றும் கலாச்சார ரீதியாக பாலியல் இன்பம், பாலியல் விழிப்புணர்வு மற்றும் கலாச்சாரத் தேவைகள், இன்னும் தெளிவாகவும் கிடைக்கவும் வேண்டும், அதுவும் கூட இளைய தலைமுறையினருக்கு ஏற்கனவே உள்ள அற்ப அளவினை கடந்திட்டால் மட்டுமே இதுபோன்ற தவறான அலங்கோலச் செயல்களினை தவிர்க்க முடியும்.