ஆரோக்கிய உணவு

செம்பருத்தி பூ இருக்கா! மருத்துவரே தேவை இல்லை…. பானம் செய்து குடிங்க போதும்!

செம்பருத்தி பூ நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகிறது.

இதிலுள்ள மருத்துவ குணங்கள் இரத்த அழுத்தத்தில் இருந்து நோயெதிர்ப்பு சக்தி வரை அதிகரிக்கிறது.

இதன் கூடுதல் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

 

 

 

 

  • ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜி பத்திரிகையில் வெளியிடப்பட்ட கருத்துப்படி செம்பருத்தி பூ டீயை தொடர்ந்து 12 நாட்கள் குடித்து வந்தால் சிஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 11.2% வரை குறைகிறது.
  • டயஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 10.7% வரை குறைகிறது.
  • உயர் இரத்த சர்க்கரை உங்கள் நரம்புகள், கண்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
  • மேலும், இது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே செம்பருத்தி சாற்றை 21 நாட்கள் குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
  • இரத்த குழாயை அடைக்கும் கொழுப்பால் இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகம். இந் பூவின் சாற்றை பிழிந்து வாய்வழியாக எடுத்துக் கொண்டு வரும் போது இரத்த கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை 22% வரை குறைக்கிறது.
  • இது நல்ல கொலஸ்ட்ரால் (எச். டி.எல்) அளவை அதிகரிக்கிறது. இந்த பூவில் உள்ள சபோனின் உடம்பானது கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கிறது.
  • செம்பருத்தி பூ இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ்ட்கள் அந்தக் காலத்தில் இருந்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  • இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடியை பலப்படுத்துகிறது. எனவே செம்பருத்தி பூவைக் கொண்டு சாம்பு தயாரிப்பது உங்க கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக அமையும்.
  • சருமத்தில் அதிகப்படியான சூரிய ஒளி படும் போது சரும புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
  • எனவே நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க செம்பருத்தி பூ உதவுகிறது. செம்பருத்தி பூ சாற்றை பருகி வரும்படி தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை பெற முடியும்.
  • இது சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. எனவே செம்பருத்தி பூவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு பலன் அடைவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button