சட்னி வகைகள்

சூப்பரான மிளகாய் சட்னி ருசியாக செய்வது எப்படி?

காலை உணவிற்கு இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள என்னடா செய்வது? என்று எண்ணி யோசிக்க வேண்டாம். இப்படி விதவிதமான முறைகளில் சட்னி வகைகளை செய்து பார்த்தால் சாப்பிடவே ஆசையாக இருக்கும். அந்த வகையில் இந்த மிளகாய் சட்னியை எப்படி செய்வது? என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 10, சின்ன வெங்காயம் – 1 கப், பூண்டு பல் – 10, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவிற்கு, உப்பு – தேவையான அளவிற்கு, பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவிற்கு

செய்முறை

முதலில் அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி காய விடுங்கள்.

அடுத்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பின்னர் வர மிளகாய் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். மிளாகாய்கள் கறுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள ஒரு கப் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வந்ததும் அதில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி பின்னர் அடுப்பை அணைத்து விடுங்கள்.

வதக்கிய பொருட்கள் சூடாக இருக்கும் பொழுதே எப்பொழுதும் சட்னியை மிக்ஸியில் போட்டு அரைக்கக் கூடாது. நன்கு ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். அப்போது தான் சட்னியின் சுவை கூடும். ஆறிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, கொஞ்சம் சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள். கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி பரிமாற வேண்டியது தான்.

பெரிய வெங்காயம் பதிலாக இப்படி சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப்படும் மிளகாய் சட்னியின் ருசி அலாதியானதாக இருக்கும். எவ்வளவு இட்லி, தோசை கொடுத்தாலும் நமக்கு இன்னும் வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button