​பொதுவானவை

மோர் ரசம்

தேவையானவை:

புளித்தத் தயிர் – அரை கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:

கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 1
கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்

அரைக்க :
வறுக்காத‌ வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் (உரித்தது) – 2
பூண்டு – 2 பல்
சிவப்பு மிளகாய் – 3
தேங்காய்த்துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை :

தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்க வேண்டிய பொருட்களைத் தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனை தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள். இந்த மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருக்க வேண்டும். அதற்கேற்ப தயிரில் தண்ணீரை ஊற்றுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிரில் சேருங்கள். நீங்கள் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இதை செய்து வைத்தால், தாளித்தவைகள் எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட அமிர்தமாக இருக்கும். சாதம் உருளைக்கிழங்குடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
aval47c

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button