ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இதை சாப்பிட்டா குழந்தையின்மை பிரச்சனைக்கு பை பை சொல்லலாமாம்.

இயற்கையான குழந்தைபேறு குறைந்து பலரும் செயற்கையை நாட தொடங்கிவிட்டார்கள். குழந்தை பேறு வேண்டி மருத்துவமனையை நாடி செல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பெரும்பாலும் குழந்தையின்மைக்கு பிரச்சனையாக மாறியிருப்பதும் அதன் காரணமும் ஆராய்ந்தால் மாறிய உணவு பழக்கமாகதான் இருக்கும்.

பழங்கள், காய்கறிகள், கீரைகள் என்று பாரம்பரியமிக்க உணவை சாப்பிடும் வரை நோய்கள் எல்லாம் தள்ளிதான் இருந்தது. இன்று உணவு பழக்கம், உடல் உழைப்பு குறைவு அனைத்தும் சேர்ந்து உடலில் ஆரோக்கிய குறைபாட்டை அதிகரித்துவிட்டது. இதில் முக்கியமானது குழந்தைபேறு.

1403314144b8a3dd8ae500289c38b456f83f3c9713153248129003671324

குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணமாக இருந்தார்கள் என்ற காலம் போய் ஆண்களும் மலட்டுதன்மை கொண்டவர்களாக இருப்பதும் அதிகரித்துவருகிறது.

இதனால் செயற்கை கருத்தரிப்பு நாடி செல்லும் தம்பதியர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனால் திருமணத்துக்கு பிறகு 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் குழந்தைப்பேறுகிடைக்கும் என்கிறார்கள் பெரியவர்கள்.
ஆண்கள் செவ்வாழையை நறுக்கி தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும். பெண்கள் இரவு நேரத்தில் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து இருவரும் சாப்பிட்டு வந்தால் குழந்தைபேறு கிடைக்கும். செவ்வாழை ஆற்றல் கொடுக்கும் பழம். கருப்பை பிரச்சனை, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்து,. பொட்டாசியம், வைட்டமின் சி சத்துகளை உள்ளடக்கியுள்ளது.ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வளிக்கும் பழமாக இதுஇருக்கும்.நரம்புதளர்ச்சி பிரச்சனை இருக்கும் ஆண்களின் ஆண்மை குறைபாட்டை களைந்து ஆற்றலை வழங்குகிறது செவ்வாழை.

செவ்வாழையால் இன்னும் பல நன்மைகள் உண்டு. மென்மையான எலும்புகள் கொண்டவர்கள் செவ்வாழையை உண்டு வந்தால் எலும்புகள் பலமடைகிறது. கண் பார்வை குறைபாடை கொண்டிருப்பவர்கள் செவ்வாழையை தொடர்ந்து சாப்பிடும் போது மாலைகண் நோய் பிரச்சனையும் படிபடியாக குணமடைகிறது. உடல் மெலிவாக இருப்பவர்கள் என்ன செய்தும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்று நினைத்தால் தினமும் ஒரு தம்ளர் பாலுடன் செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை கூடும். சருமம் பராமரிப்பில் அக்கறை உள்ளவர்கள் செவ்வாழையை சாப்பிட்டு வரும் போது சருமம் பிரச்சனைகள் எதுவும் அவர்களை அண்டாது.குழந்தைபேறையெ தீர்த்துவைக்கும் அளவுக்கு சிறந்த மருந்தான செவ்வாழையை இனி எங்கு பார்த்தாலும் தவிர்க்காதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button