ஆரோக்கிய உணவு

வெறும் அரிசியை அடிக்கடி வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

சிலருக்கு அரிசியை வெறுமனே வாயில் போட்டு மெல்லுவது மிகவும் பிடிக்கும்.

அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது, அதன் சுவை நன்றாக இருக்கும் தான்!!

ஆனால், அரிசியை வேக வைக்காமல் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு சில பிரச்சினைகள் ஏற்படுமாம்

செரிமான கோளாறு

மற்ற தானியங்கள் மற்றும் காய்கறிகளை விட அரிசியில் செல்லுலோஸ் என்னும் பொருள் உள்ளது. இது தானியங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் மனித செரிமான மண்டலத்தினால் இந்த செல்லுலோஸை முழுமையாக செரிக்க முடியாது. ஆகவே அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது, அது விரைவில் செரிமானமாகாமல் அஜீரண கோளாறை உண்டாக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பாக்டீரியா

அரிசியானது சீரஸ் என்னும் பாக்டீரியாவால் சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா உடலினுள் செல்லும் போது, உடலினுள் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். இதன் விளைவாக வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

புற்றுநோய்

அரிசியில் உள்ள லெசித்தின் என்னும் பூச்சிக் கொல்லி உடலினுள் செல்லும் போது, செரிமான செல்களை அழித்துவிடுவதோடு, இது அதிகமாக உடலினுள் சேரும் போது, குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.

லெசித்தின்

லெசித்தின் என்பது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி. இது மனித உடலினுள் செல்லும் போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அரிசியை வேக வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள லெசித்தின் என்னும் பூச்சிக்கொல்லி அழிக்கப்பட்டு, அந்த உணவை ஆரோக்கியமாக்குகிறது என்பதை மறவாதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button