Other News

குடும்ப தகராறில் மனைவியின் விரலை கடித்து துப்பிய கணவன்!

குடும்ப தகராறில் மனைவியின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய்குமார். இவரது மனைவி புஷ்பா.
அவர்களுக்கு ஒரு மகன். இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] அவருடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது அன்றாட நிகழ்வாக இருந்தது.
இதையடுத்து இரு குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டனர்.
சமீபகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் புஷ்பாவின் வீட்டுக்கு விஜய்குமார் சென்றார். இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி புஷ்பாவின் விரலை கடித்து மென்று துப்பினார்.
வலியால் துடித்த புஷ்பா அலறியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து புஷ்பா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அவரது கணவரைக் கைது செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button