ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்

முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.

உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

இதனை வேகவைத்து அதன் நீரை அருந்துவதனால் இன்னும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

முட்டை கோஸ் வேக வைத்த நீரில் விட்டமின் கே அதிக அளவு இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எலும்பு தேய்மனம், மூட்டு வலி வராமல் தடுக்கும்.

முட்டை கோஸ் நீரை அடிக்கடி குடித்தால் கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். கண் பார்வைக் கோளாறுகள் குணமாகும்.

வயிற்று அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டை கோஸ் வேகவைத்த நீரை தினமும் குடித்து வந்தால் அல்சர் வேகமாக பறந்து போகும்.

சருமம் பொலிவில்லாமல் இருப்பவர்கள் தினமும் முட்டை கோஸ் நீரை குடித்தால் சருமம் பொலிவாக இருக்கும். மேலும் கரும்புள்ளி, முகப்பருக்கள் மறையும்.

முட்டை கோஸ் நீரில் கூந்தலுக்கு தேவையான புரதம் மற்றும் கோலாஜன் இருக்கிறது. இதனை குடித்து வந்தால் கூந்தலுக்கு இயற்கையாக போஷாக்கு கிடைக்கும். இதனால் அடர்த்தியாக கூந்தல் பெறுவீர்கள்.

பல்வலி, பல் வீக்கம், பல் சொத்தை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த நீரை வாயில் அரை நிமிடம் வரை வைத்து பின் குடிக்கவும். இதனை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டை கோஸ் நீரில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸென்டென்டுகள் இருப்பதால் இவை இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்கிறது. உடல் பருமனை குறைக்கிறது. உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை கரைகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button