ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…டீ ஆறிடுச்சுனா மறுடிபயும் சூடு பண்ணக் கூடாது!

தேநீரை நிறைய போட்டு வைத்துவிட்டு, மீதி வைத்திருந்து சூடுபடுத்திக் குடிப்பது தேநீரில் நச்சுக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்கிறது ஆய்வு.

தேநீர் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு பானமாகும். குறிப்பாக காலையில் மாலையில் என இரு வேளைகளிலும் தேநீரை அருந்துவது உண்டு.

பால் மற்றும் தேயிலை கலந்து தயாரிக்கப்படும் இந்த பானம் சுவையான பானம் மட்டுமல்ல ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த ஆரோக்கியமான பானமும் கூட.

இருப்பினும் நம்மில் நிறைய பேர் தேநீர் குடிக்கும் போது இந்த தவறை செய்து இருப்போம். தேநீரை சுட வைத்து சுட வைத்து குடிப்பது தீமை விளைவிக்கக் கூடியது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஏன் தேநீரை சுட வைத்து சுட வைத்து குடிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை அறிவோம். 

  1. தேநீர் பானத்தை மீண்டும் சுட வைக்கும் அது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை வெளியேற்றுகிறது.
  2. ஆனால் மக்கள் ஒரு தடவை தயாரித்த டீயை மீண்டும் மீண்டும் சுட வைத்து குடிப்பது உண்டு. ஆனால் அப்படிச் செய்வது தேநீரின் சுவை, ஊட்டச்சத்துக்கள் இவற்றில் பாதிப்பை உண்டாக்குகிறது.
  3. 4 மணி நேரம் தேநீரை அப்படியே விட்டு விட்டு பிறகு சூடுபடுத்திக் குடிப்பது பாக்டீரியாக்கள் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  4. கெட்டுப் போன தேநீரில் நுண்ணுயிர்கள் வளர்ச்சி இருக்கும். அந்த தேநீரை நீங்கள் மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பது உங்க ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  5. அதே மாதிரி தேநீரை நீங்கள் அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது தேநீரில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆன எண்ணெய்கள், நிறைய சேர்மங்கள் இவற்றை இழக்க நேரிடலாம்.
  6. மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீர் குடிப்பது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் உங்க உடல் நலம் பாதிக்கப்படலாம். வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு, வீக்கம், குமட்டல் போன்ற செரிமான பிரச்சினைகள் அடிக்கடி வரும்.
  7. இது உங்க ஆரோக்கியத்திற்கு நச்சாகும்.
  8. தேநீரில் டானின்கள் காணப்படுகிறது. நீங்கள் தேநீரை அடிக்கடி சூடுபடுத்துவது அதிலுள்ள டானின்களை அதிகளவில் வெளிப்படுத்தி கசப்பான சுவைக்கு வழி வகுக்கும். கசப்பான சுவையால் உங்களால் தேநீரை குடிக்க முடியாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button